ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினைந்தாவது ஸ்லோகம், அம்பிகையின் ரூப வர்ணனையில் தொடங்கி, அருளின் மேன்மைகளில் விரிகிறது. கல்வி, கேள்விகளில் சிறப்புப் பெற்றிருக்க, கவித்துவத்தை விரும்புகிற அனைவரும் இந்தப் பாடலையும் இதற்கு அடுத்து வரும் பாடலையும் தியானித்தால், முழுப் பலன் கிடைக்கும். இந்த அழகிய பாடலை எளிய தமிழில் மதுமிதா வழங்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.