ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினேழாவது ஸ்லோகம். வாக்குத்தேவிகள் சூழ்ந்திருக்க, அம்பாள் எப்படிக் கொலுவிருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் விவரிக்கிறது. இந்த நிலையில் உன்னை யார் தியானிக்கிறார்களோ, அவர்கள் அரும்பெரும் காவியங்களை இயற்றும் வல்லமையைப் பெறுகிறார்கள். சொல்லின் செல்வியான அன்னையின் பெருமையை மதுமிதாவின் குரலில் கேளுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.