முக்தி

உடுமலை கி. ராம்கணேஷ்

சற்று நேரம் பொறுத்திருங்கள்
அதற்குள் என்ன அவசரம்
வாரிச் சுருட்டிக் கொண்டு
எங்கேயும் ஓட முடியாது
உங்கள் பேச்சுகளுக்குள் சிக்கி
மூச்சு விட சிரமமாயிருக்கிறது
அசைபோட இருக்கின்றன
ஆயிரமாயிரம் விசயங்கள்
எல்லாவற்றையும்
மென்று ஜீரணிக்கும் வரை
காத்திருந்தால் தான் என்ன?
அதற்குள் நீங்கள் பேசுவதை
எப்படி ஜீரணிப்பது?
இன்னும் சற்று நேரத்தில்
எல்லாம் என்னென்னமோ
ஆகப்போகிறது.
முடித்து விட்டேன்
இப்போதாவது பேசுங்கள்
என்னைப் பற்றி
ஏதாவது நல்லதாக…
நான் விடை பெறப்போகிறேன்
அப்போது …
நல்ல மவராசன்
உயிர் போக இத்தனை பாடா?
என்ற குரல் காதில் விழ
இப்போது தன்யனானேன்…
முக்தியடைந்து விட்டேன்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *