சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. சகல பரிவாரங்களுடன் ஜகஜோதியாய் அம்மன் வீதியுலா நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் மயானக் கொள்ளை நடைபெற்றது. எழுச்சி மிகுந்த இந்தத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.