நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (6)
தி.சுபாஷிணி
பார்க்க பார்க்கப் புலரும் நேரம
பார்ப்புகளும் புட்களும் சிலும்பும் நேரம்
பாரோரும் அரியெனும் அரவம் செய்நேரம்
பரந்தாமனைப் பாடிப் பாடி நீ உருகியநேரம்
பார்த்தன் தரும் பறைகளை நாடி
பார்த்து நிற்கின்றோம்! எழுவாயே நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://sourasandvaishnavas.blogspot.com/2011/03/sri-andal-alwar-who-sang-pasurams-on.html