செண்பக ஜெகதீசன் 

வளரும் செடியின்

வேரிலோ, தண்டிலோ,

தளைக்கும் கிளையிலோ,

துளிர்க்கும்

இலையிலோ, மொட்டிலோ

இல்லாத அழகை,

மணத்தைக்

கொண்டு வந்து

மலரில் வைத்து,

மயக்க வைத்து

மகத்துவம் செய்தவனை

மனத்தினில் கொள்..

அவன்-

இறைவன்…!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "மணத்தை வைத்தவன்"

  1. மலரின் மணம் போல், இறைத்தன்மையின் அழகு, கவிதையில் பளிச்சென்று தெரிகிறது.

  2. கவிதை நன்கு இருக்கிறது ஜெகதீசன்..தளைக்கும் கிளை– புரியவில்லை.. தழைக்கும் கிளை என்று சொல்ல வருகிறீர்களா?

  3. தட்டிக்கொடுத்தும்,
    சுட்டிக்காட்டியும் உள்ள
    தங்கள்
    கருத்துரைகளுக்கு நன்றி.
    தளையாய்(சங்கிலி) பின்னிப் பிணையும்
    கிளைகள் என விரிவாய் வரவேண்டியது…
                              -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.