சட்ட ஆலோசனைகள் – மோகன் குமார்
மோகன் குமார் – Mohan Kumar” <snehamohankumar@yahoo.co.in>,
சென்னையில் ஒரு நிறுவனத்தில் AGM லீகல் & கம்பனி செகரட்டரி ஆக பணி புரியும் இவர் BL ACS ICWA படித்தவர்.
நீயா நானா அரட்டை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளார்.கல்லூரிகளிலும், ACS Institute உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிலும் கம்பனி சட்டம் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசிவருகிறார்.நண்பர்களுடன் சேர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பல விதங்களில் உதவி வருகின்றார் .


திரு.மோகன்குமார்
ரா.பார்த்தசாரதி ( அனுப்புனர் )
ஐயா,
நான் கீழ் தளத்தில் ( 800 சதுர அடியில்) வசித்து வருகிறேன். நான்கு வ
வருடங்களுக்கு முன் என் தம்பிக்கு, முதல் மாடி கட்டுவதற்கு அனுமதி
அளித்தேன். எந்த வித ரொக்கப் பணம் பெறாமல் விற்பனை பத்திரம்
மூலம் கொடுத்துவிட்டேன். நான் இப்பொழுது இரண்டாவது தளம்
என் மகன் மூலம் கட்டப் போகிறேன் . என் தம்பி, எனக்குத் தெரியாமல்
விற்பனை பத்திரத்தில் எனக்கு கீழ் தளம் மட்டும் சொந்தம்,. மட்டும் என்ற
வரியை சேர்த்துவிட்டான்.( கையால் எழுதி) முக்கிய இடத்தில் அந்த வரி
சேர்க்கப்பட்டுள்ளது . அதன் பக்கத்தில் என் கையெழுத்து இல்லை.
இதைப் பற்றி என் தம்பியிடம் சொன்னபோது, இரண்டாவது தளம் அரசாங்கம் அனுமதி பெற்று முறையான திட்டத்துடன் கட்டமுடிந்தால் கட்டு என்று
முதலில் சொல்லிவிட்டு பின் ஏன் பத்திரத்தில் கீழ் தளம் மட்டும் என்று
எனக்கு தெரியாமல் சேர்த்தாய் என்று கோபமாக கேட்டேன். அவனுக்கு
நான் இரண்டாம் தளம் பிடிக்கவில்லை.
இந்த இடம் வீட்டு வசதி வாரியம் மூலம் என் பேரின் கிடைத்த இடம்.
இப்பொழுது நான் கட்டினால் ஏதாவது சச்சரவு உண்டாகுமா. நான்
விதிகளுக்கு உட்பட்டு வீட்டை கட்டியுள்ளேன் கீழ் தளம் நான்கு புறம்
இடம் விட்டு கட்டியுள்ளேன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இரண்டாம்
தளம் ( 10 பேர்) கட்டியுள்ளார்கள் .
நான் சில சட்ட ஆலோசகரிடம் விசாரித்தபோது, அது செல்லாது ( உங்கள்
கையொப்பம் இல்லாத நிலையில் ( மட்டும் ) என்ற இடத்தில் அவர் செய்தது
செல்லாது என்று கூறியுள்ளார். திருத்தப்படும் சாசனத்தின் மூலம் சரிசெய்ய முடியுமா ! தங்கள் ஆலோசனை நான் எதிர்பார்கிறேன்.