மின்னல் தென்றல் புதையல்..- காதல் காதல் காதல்..
ராமலக்ஷ்மி
மின்னல்
இரவு வானும் நட்சத்திரங்களும்
முழு நிலவும் பனிக் காற்றும்
மழை மேகமும் மின்னல் கீற்றும்
ரசனைக்குள் வந்தபோதுதான் புரிந்தது..
வாழ்வை அற்புதமாக்கும்
மந்திர சக்தி, காதலென்பது.
தென்றல்
தீண்டிய யாவரையும்
ததும்பச் செய்தது
காதலால் தென்றல்..
காற்றுவெளியை நிறைத்த
காதல் குறுஞ்செய்திகளில்
குளித்த களிப்பில்.
புதையல்
வெண்டைப் பிஞ்சு விரல்கள்
ரோஜாப்பூ இதழ்கள்
மான்போல் மருளும் விழிகள்
தேன்போல் ஒலித்தது சிணுங்கல்
பூக்குவியலாய் கையில் புதையல்
மகவை ஏந்திய அக்கணத்தில்..
பெருகியது ஈன்ற உன்மேல்
பன்மடங்காய்க் காதல்!
========================
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா
அருமை
காதல் மந்திர சத்தியே