சிங்கை கொலு & அன்னை நீலாயதாக்ஷி ஊஞ்சல் 2012
நாகை வை. ராமஸ்வாமி
அனைத்து உலக ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த நவராத்திரியில் அன்னை தேவி துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய சக்திகளாகவும் பத்தாவது நாளில், விஜயதசமியில், வெற்றி தேவியாகவும் வணங்கப்படுகிறாள்.
எங்கள் இல்லத்தில் ( நாங்கள் எங்கு வசித்தாலும், மும்பை முதல், பங்களூர், தற்சமயம் சிங்கப்பூர் ) பொம்மைக் கொலுவுடன், எங்கள் ஊர் நாகப்பட்டினம் அன்னை நீலாயதாக்ஷி தேவியை ஒரு சிறு ஊஞ்சலில் தோரணம் மலர் மாலைகளால் அலங்கரித்துப போற்றி உற்றம் சுற்றம் அழைத்து பாடல்கள் பாடி, வரும் சுமங்கலிகளுக்கும கன்னியர்களுக்கும் மங்கலப்பொருட்கள் அளித்து மகிழ்ந்து வருகிறோம்.
இந்த ஆண்டு சிங்கப்பூரில் எங்கள் இல்ல கொலு, ஊஞ்சல் புகைப்படங்கள் இத்துடன். அன்னை நீலாயதாக்ஷி போற்றி நான் எழுதி வரும் பாடல்களில் பத்து தேர்வு செய்து இசை வடிவம் அமைத்து குறுந்தகடாகவும் வெளியிட்டிருக்கிறோம். சில கணினி இசைத் தளத்திலும் (தள முகவரி கீழே).