குடியரசு தினம்
தமிழ்த்தேனீ
‘மாம்பழத்து வண்டு’
மாமரத்தில் பூக்கள் பூக்கும் போது வண்டுகள்
தேனை உறிஞ்ஜ பூக்களின் உள்ளே நுழையுமாம்
அது பூக்கள் காயாக மாறும் காலமாயிருந்தால்
பூக்கள் மூடிக் கொள்ளுமாம், அப்போது
அந்த வண்டு அந்த மாங்காயின் உள்ளே
மாட்டிக் கொண்டு,மாங்காயின் கடினமான
ஓட்டைப் பிளந்து கொண்டு வெளியே வரமுடியாமல்
உள்ளேயே இருந்து கொண்டு,
அந்த மாங்காய் பழுக்கும்வரை காத்திருந்து, யாராவது மாம்பழம் உண்ணும்போது மாங்கொட்டையிலிருந்து பெருமுயற்சியினால் வெளியே வருமாம் ,
ஆனால் அப்படி வண்டு துளைத்த பழம்
மிகவும் இனிப்பாக இருக்கும் என்று சொல்லுவார்கள்
அது போன்ற சுவையான சுதந்திரத்தை,
குடியரசு தினத்தை நாம் அடைய நாம் பட்ட பாடுகள்
அப்பப்பா சொல்லி முடியாது…..
அது போல முடியாட்சியிலிருந்து அதாவது
மன்னராட்சியிலிருந்து,வியாபாரம் என்னும் பெயரிலே
நம் நாட்டுக்குள் நுழைந்த அன்னியர் ,அதாவது பிரிட்டிஷார்
நம் நாட்டையே ஏகபோகமாக ,தங்கள் வசப்படுத்திக் கொண்டு
நம்மைப் படுத்திய பாடு இருக்கிறதே..அப்பப்பா
நம் மன்னர்கள் ஆண்ட காலங்களில் கூட ஒருசில
கொடுங்கோல் மன்னர்களின் அட்சியைத் தவிற மற்ற
காலங்களில் நாம் சுபிக்க்ஷமாய்த்தான் வாழ்ந்திருக்கிறோம்
ஆனால் பிரிட்டிஷார் ஆண்ட காலங்களில் மாங்காய்
ஓட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட வண்டு போல்
சிறைப்பட்டு பறக்க முடியாமல் முடங்கிக் கிடந்தோம் ,
மீண்டும் சுதந்திரம் என்னும் மாங்கனி பழுத்தபின்தான்
நாம் பறக்கத் துவங்கினோம்,சுதந்திரம் என்னும் மாங்கனி
பழுப்பதற்கு எத்துணை காலமாற்றங்கள்,
எத்துணை இயற்கை மாற்றங்கள்,எத்துணை மனமாற்றங்கள்,
எத்துணை ஏமாற்றங்கள் ,எத்துணை இழப்புகள்,
அத்தனையையும் சந்தித்திருக்கிறோம்
தேன் என்று நினைத்து உண்ணும் ஆசையினால்
நாம் வியாபாரம் என்னும் வலையை மகரந்தம் என்று
நினைத்து , பூக்கள் என்று நினைத்து அன்னியர் வலையின்
உள்ளே நுழைந்து அடிமைத்தளையில் மாட்டிக் கொண்ட
வண்டு போல்,அன்னியர் விரித்த வியாபார வலையில்
மாட்டிக் கொண்டு ,அன்னியர் ஆட்சியில் அனுபவித்த
கொடுமைகள் ஏராளம் ,அந்த அடிமைத்தளையிலிருந்து,
விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தி,மக்களுக்கு அறிவுறை கூறி
தங்கள் இளமை வளமை போன்றவற்றை,
தாங்களாகவே விட்டுக் கொடுத்து ,அனேக தியாகங்கள் செய்து ,
தம் சொந்த வாழ்வைத் துறந்து ,மக்களுக்காகவே தாய்நாட்டு
சுதந்திரத்துக்காகவே பாடுபட்ட பெரியோர்கள்
பாடுபட்டு ,மிகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரையும்
அளித்து பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் நம் நாட்டு
சுதந்திரம்,அப்படிப்பட்ட சுதந்திர உணர்வை ஊட்ட
மஹாத்மா காந்தியடிகள் 1930ம் ஆண்டு ஜனவரி மாதம்
போட்ட விதைதான் குடியரசு தினம் ,
“ குடியரசு நாள் என்பதன் அர்த்தமே
“பூரண சுயராச்சியமே நமது உடனடியான லட்ஷியமென்பதுதானே “
அதாவது மக்களே தங்களை ஆள தாங்களே
தங்கள் ப்ரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை
வலியுறுத்தும் நாள், அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ,
நாம் சுதந்திரமடைந்தோம்,1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள்
இந்தப் பதினேழு ஆண்டுகளும்,அதற்கு முன்னும் நம்மை
அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷார் ஆண்ட காலங்களிலும் எத்துணை
கொடுமையான கடுமையான
அடிமைத் தனத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்
கொஞ்ஜம் நினைத்துப் பார்ப்போம்
அதற்குப் பிறகு நம் இந்திய வரலாற்றிலே
எத்துணையோ மாற்றங்கள்,தியாகங்கள்,
மக்களின் விழிப்புணர்ச்சி, நம்முடைய முன்னோர்கள்
வீரமுழக்கமிட்டு பல தியாகங்கள் செய்து ஏற்படுத்திய
சுதந்திர பாரதம்,மஹாத்மா காந்தி விதைத்த
அந்த 1930ம் ஆண்டுஜனவரி மாதம் 26ம் தேதி ,
அதுதானே சுதந்திர வேட்கையை இன்னும் அதிகரித்தது
நம் மனதில் அதனால்தான் இன்றும் எல்லா
நாட்டிலும் சுதந்திர தினத்தை மட்டும் கொண்டாடும்
வழக்கம் இருந்தாலும் ,நம் தாய்த்திரு நாட்டில்
பாரத தேசத்தில் மட்டும் இன்றும்
குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதியும்
சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் நாளும்
கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தி இருக்கிறோம்
“ ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னும்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ “
என்று பாரதி மஹா காளியிடம் கதறியது நம் நினைவில்
என்றுமே இருக்க வேண்டுமே, கப்பலோட்டிய தமிழன்
வ வு சிதம்பரம் பிள்ளை நம் தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக
செக்கிழுத்து பட்ட இன்னல்கள் நாம் அறியோமா
வாஞ்ஜினாதன் ஆஷ் துரையைக் கொன்று விட்டு
தானும் சுட்டுக் கொண்டு மடிந்ததை நாம் அறியோமா
சுப்ரமணிய சிவா சிறையில் வாடி சீக்கு வசப்பட்டது
நாம் அறியோமா ,ஜவஹர்லால் நேரு அவ்ர்கள் தன்னுடைய
சொத்துக்களை நம் நாட்டின் வளர்ச்சிக்காக தானமாக
அளித்தது நாம் அறியோமா, மூதறிஞ்ஜர் ராஜாஜி,
கக்கன் ,காமராஜர் , போன்றோர் நமக்காகப் பட்ட துன்பங்கள்
நாமறியோமா ,கடைசீ சொட்டு குறுதி இருக்கும் வரை
கையில் பிடித்த நம் தேசக் கொடியைக் கைவிடாது
தன் இன்னுயிர் நீத்த கொடி காத்த குமரன் ,
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்,
நமக்காகப் பாடு பட்டு ,சுதந்திரம் வாங்கிக்
கொடுத்த அத்துணைபேரையும் பட்டியலிடவேண்டுமானால்
நம் ஆயுசுக்கும் பட்டியலிடலாம்
அப்படியெல்லாம் பாடு பட்டு நம் முன்னோர்கள்
வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுதந்திர நாளிலும்,
குடியரசு நாளிலும் நாம் கொண்டாடுவோம்
தன்னைப் பழித்தாலும் பொறுப்போம்
ஆனால் தாயைப் பழித்தவனை
தாயே தடுத்தாலும் விடோம் என்னும்
கொள்கையை மக்கள் மனதிலே,ஊறச்செய்யும்
ஒரு புனித நாளாக, நம் தாய் நாட்டுக்கு பாதகம்
செய்பவரை அவர் யாராயிருந்தாலும் மன்னிக்க மாட்டோம்
என்னும் உறுதி மொழி எடுக்கும் நாளாக குடியரசு தினத்தை
கொண்டாடுவோமே,
82 வயதான குடியரசு நாளை நம் தேசத்துக்காகப் பாடுபட்ட
ஒரு முதியவரின் நிலையில் வைத்து நன்றி சொல்லி
இனியாவது குடிமகனாய் நம் கடமை என்னவென்றுணர்ந்து
நம் நாட்டை வளமான நாடாக மாற்றும்
முயற்சியாக,பல நல்ல ப்ரதிக்யைகளை
மனதில் கொண்டு சத்தியப் ப்ரமாணம் எடுத்துக் கொண்டு
கொடி வணக்கம் செய்து ,நம் பாரத தாயை வணங்கி ,
நம் நாட்டின் கொடியை மனமகிழ்ச்சியுடன் ஏற்றி
நம் தேசக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் கண்டு
மனம் முழுவதும் சந்தோஷமாக அனைவருக்கும்
இனிப்புகள் வழங்கி நலிவுற்றோருக்கு நன்மைகள்
செய்து,ஜாதி மத இன, மொழி பேதமில்லாது
அனைவரும் ஒற்றுமையாக ஒரு
நல்ல நாளாக கொண்டாடுவோமே,சுதந்திரம் ,
குடியரசு என்னும் இனிய கனிகளை நாம் அனைவரும்
சேர்ந்து சுவைப்போமே,மனிதம் மலரட்டும் உலக அரங்கிலே
நம் தேசம் இந்தியா சர்வ வல்லமை பொருந்திய
நல்ல நாடாக செழித்தோங்கட்டும்
” தாயின் மணிக்கொடி பாரீர்
அதைத் தாழ்ந்து பணிந்து
புகழ்ந்திட வாரீர் “
அருமையான கத்ய்பத்யம்