-வருணன்


மாளிகையின் மையத்தில்
ஆடத் துவங்குகிறாள் தாசி
வளைந்து நெளியுமவள் வளைகரங்களில்
பொங்கிப் பெருக்கெடுக்கிறது கடலலை
சிலும்புமவள் கேசத்தினின்று
சப்தித்து வீழ்கிறதோர் கருப்பு அருவி
தளைத்த இளமையுடன் திளைத்தாடுபவளின்
அங்கம் தின்னும் விழிகளோடு
மதுக்கோப்பை ஏந்திய கரங்கள்
ஆயிரமாயிரம் பூட்டுகளைத் திறந்திடும்
விழிச் சாவிகளிரண்டும்
அவள் வசம் பத்திரம்
தொலைத்தது அவளிதயப் பூட்டினை
மாத்திரம்.
படத்துக்கு நன்றி: http://www.miradha.com/historia-del-bharatanatyam/?lang=en

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.