அம்மா உன் கைப்பிடித்தே…..
தமிழ்த்தேனீ
கைப்பிடிக்கத் தெரிந்த கணம் முதலாய்
கைப்பிடித்தே வளருகின்றேன் உன்றன்
மெய்ப்பிடித்துப் போனதனால் இன்றும்
மெய்ப்பிடித்தே உயிர்வளர்க்கலானேன்.
உறவளக்கும் சிறுவடி கொண்டே நானும்
உலகளக்கும் திருவடியாம் உன்றன் பாதம்
பற்றினேன் பற்றினேன்… பற்றிப் பற்றி
உற்றதொரு பாதை தனையே கண்டேன்.
அம்மா உன் கைப்பிடித்தே உலா வந்தேன்
சும்மா என் அறிவுச் சுடர் தூண்டிவிட்டாய்
எம்மாப் பேறும் எனக்கிங்கே பெரிதில்லை
அம்மாவாய் உனைஅடைந்த பேறே போதும்.
======================================
படத்திற்கு நன்றி: http://www.chicagonow.com