செண்பக ஜெகதீசன்
பிடிக்கவில்லை என்றாலும்
இதழ்களில்
புன்னகையை ஒட்டிக்கொள்..
வேண்டாம் என்றாலும்
வாயில் கொஞ்சம்
வழிவிடு இனிய சொல்லுக்கு..
தேவையில்லை என்றாலும்
தெரிந்தோ தெரியாமலோ
பிறர்க்குக்
கொஞ்சம் உதவிப் பழகு..
பலனேயில்லை யெனிலும்
பலர்க்கு
நலனே செய்துபார்..
தேவையே இல்லையெனிலும்
தெரியும் பார்
உன்னைச் சுற்றி ஒளிவட்டம்…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
சபாஷ். நல்லதொரு கவிதை.
தேவையே இல்லையெனினும்
கூடும்
உன்னை சுற்றி ஒரு கூட்டம்.
திரு. தனுசு அவர்களின் கருத்துரைக்கு
மிக்க நன்றி…!