சு. கோபாலன்

034

சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க

ஆறுமுகன் ஆறுனாட்கள் அவனுடன் சமர்செய்து ஆறாம் நாள்(சஷ்டி)

தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து

ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்து

கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று

அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு003

மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!
கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டி புனித நாளில்…………

கந்தனைக் குறித்து

சிந்தனை செய்திடு

‘எந்தனைக் கா’வென

வந்தனை புரிந்திடு

உந்தனைக் காக்க

வந்துனை அடைவான்!

 

சு.கோபாலன்

படங்களுக்கு நன்றி:

http://www.kaumaram.com/gallery/003.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *