விசாலம்s-index

அன்னை சக்தி உன்னிடம் பாதி
அண்ணாமலையில் ஒளிரும் ஜோதி .
ஐந்தெழுத்து மந்திரம் துன்பம் நீக்கும்
ஐந்தெழுத்து ஜபிக்க மனமும் அடங்கும்
உயிர்களைக் காக்க விஷமும் குடித்தாய் .
உயிர்களின் அழிவை தடுத்து வென்றாய்
கர்ம வினைகள் எல்லாம் நீங்கும்.
கரத்தில் சூலம் எதிரியை அழிக்கும்..
துன்பம் அழிக்கும் பஞ்சாட்சர ஜோதி
துதிப்போரின் தீவினைகள் மறைவது நீதி.
உன் விபூதி பூச மனமும் அடங்கும்.
உயிருக்குள் ஒரு சக்தி தொடங்கும்.
காங்கேயனை அளித்த முக்கண்ணன் நீதானே!
காலனை அழித்த பரமசிவன் நீ தானே!
நமசிவாய ஓதினாலே மரணபயம் தீரும் .
நம்பியவர் வாழ்வில்அருளொளி வீசும்
உன் தாள் பணிய மறுபிறப்பேது?
உன் நாமம் ஓத எனக்குக் குறையேது?

படத்துக்கு நன்றி

http://www.angelfire.com/nc2/cybertemples/Shiva.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *