எஸ் வி வேணுகோபாலன் 

இளமைக்கால நினைவுகளை,
துள்ளாட்டத்தைக்                                                                                            Nungu     
கூட்டமாய்ச் சேர்ந்து
கொண்டாடிய பொழுதுகளை
வெயிலைச் சவாலுக்கு இழுத்த
திமிர் பிடித்த பருவத்தை…

எப்படியோ சூல் கொண்டு
பிறந்து கனிந்து விழுந்து
லாரிகளில் இடம்பெயர்ந்து
நகரத்தை எட்டிய பனங்காயைக்
கையிலெடுக்கும் மாரிச்சாமி
கீறி எடுத்துக் கொடுக்கிறார் 

முப்பதாண்டுகளுக்கு முன்பான
ஒரு கோடையில், கிராமத்தில்
அண்ணன்காரன் தட்டிப் பறித்துப் போன
இளசான நுங்காகப் பார்த்து!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *