நீங்கவேண்டிய மனவடிவம்…?
-நாகினி
ஒளியாய் வளியாய்
விண்ணாய் மண்ணாய்
செடியாய் கொடியாய்
ஓங்கிய விருட்சமாய்
மலையாய் அலையாய்
விளங்குவோன் என
இயற்கை வடிவாய்
‘உன்னை’ப்
போற்றித் துதித்த
கரம் கொண்டே
இயற்கையைச் சிதைக்கும்
வன்முறைச் செயலுக்கும்
காரணியாய் விளங்குவோன்
‘நீ’யே எனப்
பழி சுமத்தி
நேரத்திற்கொரு நிறம்
மாறும் பச்சோந்தி
மன வடிவு நீங்கி
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாத
உண்மைப் பகுத்தறிவு குறையா
மனித(ம்) வடிவாய்ப் பாரில்
உலவிட உரமாகும்
எங்கும் நிறை ‘இறை’யே போற்றி!
நன்றி