-நாகினி

ஒளியாய் வளியாய்
விண்ணாய்  மண்ணாய்
செடியாய் கொடியாய்                                  nature
ஓங்கிய விருட்சமாய்
மலையாய் அலையாய்
விளங்குவோன் என
இயற்கை வடிவாய்
‘உன்னை’ப்
போற்றித் துதித்த
கரம் கொண்டே
இயற்கையைச் சிதைக்கும்
வன்முறைச் செயலுக்கும்
காரணியாய் விளங்குவோன்
‘நீ’யே எனப்
பழி சுமத்தி
நேரத்திற்கொரு நிறம்
மாறும் பச்சோந்தி
மன வடிவு நீங்கி
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாத
உண்மைப் பகுத்தறிவு குறையா
மனித(ம்) வடிவாய்ப் பாரில்
உலவிட உரமாகும்
எங்கும் நிறை ‘இறை’யே போற்றி!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நீங்கவேண்டிய மனவடிவம்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *