— கவிஞர் காவிரிமைந்தன்

panam padaithavan
மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் சென்னை என்.கே.டி.கலா மண்டபத்தில் வழங்கப்பட்டது. நெற்றியிலே ஒரு திலகம் எப்படித் திகழுமோ அப்படி கவிஞர் வரையும் பாடல் வரிகளிலும் சில நட்சத்திரமாய் மின்னும். எழில் முகம், செவிகள், என ஏனைய இடங்களிலிருந்தாலும் பளிச்சென்று படுவது அந்தத் திலகம்தான்!

அதுவும் அந்நாளில் கோலோச்சியிருந்த கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர்கள் பட்டம் வழங்கியபோது ஆற்றிய உரையில் கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைச் சுட்டிக்காட்டி புதிதாக வந்துள்ள கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்த வரிகள் தன்னைக் கவர்ந்தன என்று சபையில் எடுத்துரைத்து ‘மைவிழியில் வடம் புடிச்சான்’ என்கிற வரியை ரசித்துப்பாராட்டினார். இது கவிஞர் வாலி அவர்களின் கற்பனைக்கு கண்ணதாசன் தந்த பாராட்டு மொழியாகும்!

இந் நிகழ்ச்சியில் விருதினை வாங்கிட வருகை தந்த மெல்லிசை மன்னர்கள் இருவரையும் அடையாளம் தெரியாததால் சபாக்காரர் உள்ளே விடவில்லை என்பதும் பிறகு அடையாளம் தெரிந்த ஒரு திரைப்பிரமுகர் தலையிட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றதும் மறக்க முடியாதது! அந்த அளவு மக்கள் மத்தியில் வரும்போதும் எளிமையாக தோற்றமளித்த காரணத்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது!

‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்களால் இயற்றப்பட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களும் இணைந்து நடித்த காட்சியில் பி.சுசீலா குரலில் இழைந்துவரும் இப்பாடல் தருகின்ற மயக்கம் கொஞ்சமல்ல! கவிஞரின் கற்பனை – பெண்மையின் குணங்களில் நான்கும் பேதையவளை படுத்தும்பாட்டை பாட்டில் நாகரீகச் சொல்லெடுத்து நயமாக வடித்துத் தந்துள்ளார்! பெண் தானிருக்கும் தனிமையில் பாடத்துவங்கும் இந்தப் பாட்டின் இடையே கதாநாயகன் வருவதையும் கவனியாமல் தொடர, நாயகனும் பாடலோடு இணைந்து டி.எம்.செளந்திரராஜன் குரலில் மெருகூட்டிய இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒருவித மயக்கம் வந்துவிடுகிறது பாருங்கள்! இப்போது பாடலை மறுபடி கேளுங்கள்!!

http://youtu.be/ceF3fMieGqY
காணொளி: https://www.youtube.com/watch?v=UUrzzPjerag

 

படம்: பணம் படைத்தவன்
பாடல்: வாலி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: டி எம் எஸ், பி. சுசீலா
………………………………………………………………

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன்
பின்னால் சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்

ஊர் அடங்கக் காத்திருந்தான்
ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
ஊர் அடங்கக் காத்திருந்தான்
ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
பால் பழத்தை வாங்கி வந்தான்
பள்ளியரையின் வாசல் வந்தான்
வெக்கதிலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான்

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கண்ணுறங்கப் பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
கண்ணுறங்கப் பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
குத்து விளக்கைக் கொறச்சி வைச்சான்
கொதித்திருந்தேன் குளிர வைத்தான்
வெட்கத்திலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான்

ஓஓஓஓஓஓஓஓஓஓ

மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை என்ன
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை என்ன
முத்து நகையின் ஓசை என்ன
மூடி வைத்த ஆசை என்ன
என்னருகே பெண்ணிருந்தா
பெண்ணருகே நானிருந்தேன்

அந்தப் பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா
என்னைப் பார்த்திருந்தா
அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன்
நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன்

கட்டழகைப் பார்த்து நின்னேன்
கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
கட்டழகைப் பார்த்து நிண்னேன்
கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
மொட்டு சிரித்தால் விட்டுக் கொடுத்தாள்
தொட்டுக் கொடுத்தேன் தானும் கொடுத்தாள்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம்

அந்தப் பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா
என்னைப் பார்த்திருந்தா
அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன்
நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன்

vaali(1)visramtmsps3பணம் படைத்தவன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.