-சக்தி சக்திதாசன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னை எரித்த
எண்ணெய் என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
காலில் தைத்த முட்கள்
பயணத்தின் துணை என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கவியரசரின் முன்னே
கால் தூசு என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
அன்பு மனங்களின் பாசம்
என் எழுத்தின் வாசம் என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னை அறிந்திடும்
தேடலின் பாதை என்பேன்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
எல்லாம் தமிழினுள்
ஐக்கியம் என்பேன்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *