மீ.விசுவநாதன்

8-1
ஒருபூ எடுத்துநான் போடாமல் ஓடிய நாளாய் இருந்தேனே !
தெருவில் திரிகிற தீவட்டி , தேவடி ஈசன் மறந்தேனே !
பருவச் சிறுமையில் பாராமல் பாடிட வார்த்தை இழந்தேனே !
அருமை அருட்பெரும் ஆனந்தன் ஆடிட நெஞ்சம் மறுத்தேனே !

கல்வி அறிவினைக் கைவிட்டு கயவனின் கையில் கிடந்தேனே !
பல்கிப் பெருகிய பொய்யினிலே பாடியே நாளைக் கழித்தேனே !
வில்வ இலையைக் கொள்ளாமல் வீணடிக் கலையைக் கொண்டேனே !
நல்ல சிவனிடம் கேட்கின்றேன் நாடிய நானாய்த் தெளிவாயே !

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, விளம், காய் , விளம் ,மா, காய் ,)
(01.04.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *