–எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

          மாண்டவர் கணக்கை எண்ணில்
          மனமெலாம் கலங்கு திப்போ
          மீண்டவர் வாழ்வு கூட
          வீதியில் நிற்றல் ஆச்சே!

          ஆண்டவன் கணக்கில் யாவும்
          அப்போதே இருக்கு என்று
          தோன்றிடும் வண்ணம் பேசும்
          துடுக்கினைக் கேட் கின்றோமே!

          இயற்கையின் சீற்றம் வந்து
          இரக்கத்தை எடுத்து விட்டுத்
          துயரெனும் பரிசைத் தந்து
          துவம்சமே செய்த தங்கே!

          நேபாள மக்கள் வாழ்வில்
          நீண்டதோர் துயர ஆறு
          ஓடிய செயலைக் கண்டு
          உலகமே பதறிப் போச்சு!

          துன்பத்தில் ஆழ்ந்து நிற்பார்
          துயரெலாம் துடைக்க வேண்டும்
          அன்புடன் ஒன்று சேர்ந்து
          அனைவரும் உதவி நிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.