உழவே உயிரெனக் கொள்க !

-பா. ராஜசேகர்

தூங்கி
எழுந்ததும்
வானத்தைப்
பார்ப்பான்
தூறல்                                                              farmer
வருமா
மேகத்தை
கேட்பான்!

அள்ளிய
சாணியைக்
கழனியில்
சேர்ப்பான்
தண்ணியக்
காட்டி
மாட்டையும்
பூட்டி
ஏரைப்
புடிச்சி
உழுகும்
போ பாரு!

கண்ணும்
சொருகும்
மண்ணும்
பழகும்
பழகிய
மண்ணில்
பலன்களைச்
சேர்த்துப்
பயிர்களை
விதைப்பான்
பசியிலே
கிடப்பான்!

நீருக்கு
ஏங்கி
வானத்தைப்
பார்ப்பான்
வரப்பிலே
தூங்கிக்
காலத்தைக்
கழிப்பான்!

உழவன்
நலம்பேணும்
காலங்கள்
வருமோ?
உழவுத்
தொழிலும்
மதிப்புதான்
பெறுமோ?

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *