-துஷ்யந்தி, இலங்கை

மண்ணிலே பிறந்தோம்
மனிதர்களாய் வளர்ந்தோம்
மனதிலே இறைவனை
மறவாமல் நினைத்தோம்!

மதங்களை ஆக்கினோம்
மனிதனாய் வாழ்வதற்கே!
மரணித்து மரணித்து தினம்
மடிந்திடவா மதங்கள் எமக்கு?

மனித உடலிலே இறைவனவன்
மாறாத நிறமாய்க் குருதி தந்தானே…
மானிடா அதை மறந்ததேனோ?
மண்ணிலே பிறந்ததெல்லாம்
மண்ணுக்கே உரிமையல்லவா?
மாறாக அதைக் கையில் எடுக்க
மனம் வந்தது எப்படி மனிதா?

மாற்றங்கள் நம் மனதில் வரட்டும்
மனிதம் நம்மில் குடிகொள்ளட்டும்
மதங்களில் பிரிவுகள் அழிந்திடட்டும்
மக்களெல்லாம் இன்பத்திலே
மகிழ்ந்திடட்டும்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *