-துஷ்யந்தி

உலகினில் ஆயிரம் மொழிகள் – அவை
   என்னுயிர்த் தமிழ்போல் இல்லை
உலகினில் இதனைச் சொல்ல – கணினி
  இணையதளத்திற்கு ஈடு இல்லை!

மூன்று குலத்தமிழ் மன்னர் – அன்று
    ஆண்ட கதைதனைக் கேளீர்
அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் – இன்று
   காட்டிடும் தமிழ் இணையம் பாரீர்! 

வள்ளுவன் கம்பன் போல – தமிழை           inaiyathamizh
   போற்றியவர் யாரும் உண்டோ?
இறவாத புகழுடைய நூல்கள் – இன்றும்
   இணையத்தில் காணலாம் வாரீர்!

ஆங்கில மோகத்தில் திளைத்து – உலகில்
     அழிந்திடும் நிலை நம் மொழிக்கு
அவை யாவையும் இன்று தடுக்க – வந்த
    தமிழ் இணையங்களைப் பாரீர்!

மொழிதனைப் பயிலும் குழந்தை – அதை
    முறையாய்த் தொடரலாம் இங்கு
இலக்கண நூல்களும் தமிழகராதியும் – அதற்கு
  இணையத்தில் மென்பொருளாகக் காணீர்!

பிறநாட்டு நல்லறிஞர்கூட – தமிழை
   சுவைபட உணர்ந்தனர் இன்று
தேமதுரத் தமிழோசையை – உலகில்
  பரப்பிய பெருமை இணையத்திற்கே!

ஆய்வுகள் எத்தனை செய்தோம் – இன்று
   சான்றுடன் இணையத்தில் கண்டோம்
மாறிடும் வாழ்வில் இனி என்றும் – தமிழ்
    மாண்டிடாது காத்திடும் இணையம்!

சமூக வலைத்தளங்கள் கண்டோம்- அதில்
   அறிஞர் பலரை நட்பால் இணைத்தோம்
ஒரு தாய் வீட்டுப் பிள்ளையாய் – இன்று
   கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்!

தாய்த்தமிழ் மாறுவதில்லை – இனி
        தாகத்திற்கு இடமுமில்லை
மொழியின் தேவைகள் யாவையும் – இன்று
     வழங்கிடும் நிலையில் இணையம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *