சுரேஜமீ​​
avallu
மேல்நீர் நிலைவாரா மண்ணில் கானழிக்க
ஏர்பிடிக்கும் கைகள் இயந்திரம் நோக்கின்
வருமுலகில் உண்ணும் உணவேது – வள்ளுவம்
நெறிபழகிச் செய்யப் பழகு!
கானழிய வெப்பம் தானேகும் பூமியில்
காற்றும் கரும்புகை யேகிநச்சைத் தூவும்
உயிரழிக்கும் துன்பம் விலக்க – வள்ளுவம்
காட்டும் திசையறிந்து வாழ்!
ஓரிடத்துப் பெய்தும் வருமிடத்துப் பொய்த்தும்
சேரிடத்தில் வீணாய்ப் போகும் மழையும்
பேரிடராய் மண்ணில் புகுதல் நீக்கத்
திருக்குறள் சொல்லும் வழி!
ஈதலை நன்கறியப் பேணிடு ஞாலஞ்செய்
வளம்யாவும் அன்றேல் அழிந்திடுவர் நாளையர்;
வள்ளுவம் வெல்நெறியே மாந்தர்க்கு என்றும்
வழித்துணை யாமறிந்து செல்!
வளம்குன் றின்வரும் போருணர்வாய் மாநிலத்தில்
தாயுள்ளம் தள்ளாடும் சேயுயிர்கள் வாடிநிற்க;
தேடிடுவாய் மண்ணில் நிறைகளையே – வள்ளுவம்
தெரிந்து கற்கத் தெளிந்து!
 
அன்புடன்
சுரேஜமீ​

                                                  

—————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *