துஷ்யந்தி
**************************

ஒரு விரல் சுட்டிக்காட்ட
மறு விரல் தன்னைக்காட்ட
குற்றங்கள் சொல்வாரடி- கிளியே
குற்றம் நிறைந்தாரடி.!

கண்கள் இரண்டிருந்தும்
காணும் திறனிருந்தும்
பிறர் பசியை உணராரடி- கிளியே
உவமானம் இவர்க்கேதடி.!

பெண்மை வாழ்க என்றே
பெரிதாய் சட்டங்கள் அமைத்தும்
வன்புணர்வில் இன்பம் காண்பாரடி -கிளியே.!
மன்னிப்பு இவர்க்கேதடி..!

கூட்டம் கூட்டி வைத்து
தோற்றமாய் மேடையேறி
சாட்டையாய் கருத்துரைப்பாரடி-கிளியே
அடுத்த கனம் மறப்பாரடி..!

அடுக்கடுக்காய் மாடி கட்டி
ஆடம்பரப் பொருள் சேர்த்து
செல்வந்தராவாரடி- கிளியே
கல் நெஞ்சம் கொண்டாரடி..!

பச்சிளம் குழந்தையொன்று
பசியினால் பிச்சை கேட்க
துஷ்பிரயோகம் செய்தாரடி- கிளியே
பேசிப் பயனென்னடி..!

அல்லும் பகலுமாய்
ஆண்டவன் கோயில் சென்று
பூஜைகள் செய்வாரடி- கிளியே
பிறர்கு உதவ மறந்தாரடி.!

பெற்றவரை மற்றவருக்காய்
அலட்சியம் செய்துவிட்டு
காப்பகத்தில் கைவிட்டாரடி- கிளியே
உண்மை அறியாரடி..!

போதைக்கு அடிமையாகி
போகும் பாதை தெரியாது
வாழ்வை வீண் செய்வாரடி- கிளியே
வாழ்வில் உயர்வேதடி..!

மாறும்உலகத்திலே
மனிதத்தை மறந்துவிட்டு
வாழப் பழகினாரடி – கிளியே
இவருக்கு வாழத் தகுதியுண்டோ???

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *