சூன்யத்தின் மறுபக்கம்…

0

-கவிஜி 

 இருமுறை
தூக்குப் போட்டும்
தப்பித்துக் கொண்டவர்…
ஒருநாள்
திடும்மெனக் காணாமல்
போனவர்…

ஏனோ அவரை
நாங்கள் ஒருபோதும்
தேடவேயில்லை!

இன்றும் மிகப் பெரிய
முகப்பறையில்
தனியாக, புகைப்படமாய்த்
தொங்கிக் கொண்டிருக்கும்
தாத்தா-
எனக்குச் சொல்ல
ஒன்றுமில்லை என்பது போலப்
பார்க்கிறார்!

நாங்களும் கேட்காத
காதுடன்தான்
அறையைக் கடக்கிறோம்!

அறை முழுக்க
நிரம்பிக் கிடப்பதாகத்
தோன்றுகிறது
சூன்யத்தின் வெளிச்சம்
அல்லது தாத்தாவின் நீட்சி!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *