ஹைக்கூ
-சரஸ்வதி ராசேந்திரன்
மழை
வாடும் வேருக்கு
நீர் விடும்
இயற்கை!
அமாவாசை
நிலவு தொலைந்த
சோகத்தில் முகம்
இருண்டுகிடக்கிறது
வானம்!
முழு நிலவு
வான் குளத்தில்
மலர்ந்தது
வெண் தாமரை!
அலைகள்
கரைப்பார் கரைத்தால்
பாறையும்
கரையும்!
கறையான்
சேமித்த புத்தகங்களைச்
சில நொடிகளுக்குள் படித்துக்
கரைத்துக் குடித்தது!
விண்மீன்கள்
வானம் முழுதும்
மத்தாப்புச்
சிதறல்கள்!