மீ.விசுவநாதன் 

 

arunachaleswarar-tiruvannamalai

 

மலைமலையாய்ச் செல்வம் வந்தாலும் – அண்ணா
   –மலையானை என்றும் மறவாதே!
அலையலையாய்த் துன்பம் வந்தாலும் – அந்த
   அருணகிரி யானைத் துறவாதே! 

மலைமலையாய் உறவு வந்தாலும் – அண்ணா
    –மலைஉறவை யென்றும் தள்ளாதே!
அலையலையாய்க் கவிதை வந்தாலும் – அருணை
    –அழகனவன் அடியைத் தள்ளாதே! 

மலைமலையாய்ப் பதவி வந்தாலும் – அண்ணா
    –மலைஉதவி யென்று நம்பிடுவாய்!
அலையலையாய்ச் சிதறிப் போனாலும் – சிவன்
    –அன்பென்றே பணிவாய்க் கும்பிடுவாய் !

    (அரையடி வாய்பாடு: காய்,மா,காய்)

  

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *