சந்தர் சுப்பிரமணியன்

 

உறவினரின் வீட்டில் விஷேசம்.

‘அடையாளமே தெரியலையே’
‘கண்டிப்பா வீட்டுக்கு வாப்பா’
‘உன்னையெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு’
‘மதுரைக்கு வந்த வாப்பா’
‘என் பையன் உன்னைப் பத்தித்தான் ரொம்ப பேசிட்டே இருப்பான்’
‘மீசையும் அதுவுமா, பெரிய ஆளாயிட்டியே’
‘ஏன்டா, எங்க முகமெல்லாம் மறந்தே போச்சா?’
‘உங்க மாமா போனபோதும் நீ வரலியா?’
‘அப்பப்போ வந்து பாத்துட்டுப் போப்பா’
‘கிருஷ்ணன் தெரு, அந்த முக்கு வீட்டுலேதான இன்னும் இருக்கே?’

– மீண்டு, வீடுவந்துசேர மாலை ஆயிற்று.

அவசர அவசரமாகக் கதவைத் திறந்து,
தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினேன் –
தொடர்கதை ஆரம்பித்துவிட்டிருப்பான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *