மார்கழி மணாளன் 21 – நைமிசாரண்யம் –  தேவராஜப் பெருமாள் 

க. பாலசுப்பிரமணியன் 

5c4a6a61-a8a5-4f32-a3c0-1ca8ef7fcaac

நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது

நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத்  தந்தது

நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது

நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ் சொன்னது !

 

மலர்வண்ணம் கனிவண்ணம்  எழில் பொங்கும்

வான்மின்னும் கான்வண்ணம் மனம்கொள்ளும்

இறைபோற்றும் வேள்வி பெருக்கும் ஒளிவண்ணம்

இசையோடு இயல்சேர்க்கும் வேதியர் ஒலிவெள்ளம்  !

 

வான்விட்டு மண் வந்து தவம்செய்த விண்ணவரும்

ஊன்விட்டு உயிர்தொட்டு மனம் காக்கும் யோகியரும்

இறைமட்டும் தேடி அமர்ந்த இனிய நைமிசாரிண்யம்

இயற்கையை இசைத்து இறைவன் படைத்த காவியம் !

 

மரணத்தை வெல்ல வரம்பெற்றான் விருத்தன்

மதம்கொண்ட களிறுபோல் மயக்கம் கொண்டான்

மனமுடைந்த இந்திரனும் மாலனின் சொல்கேட்டு

மாதவத்தோன் ததீசியிடம் எலும்பைப் பெற்றான் !

 

வஜ்ராயுத்தில் வளைந்தது விருத்தனின் ஆணவம்

வானவர் யோகியர் மோனத்தில்  மலர்ந்தது கானகம் !

மறைகளை போற்றிடும் மாதவர் காண மாலனும் வந்தான்

மங்கலம் பொங்கிட மானுடம் தழைத்திட மார்கழி மணாளன் !

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *