-அண்ணாகண்ணன்

விடலை அவன் விட்டு விடலை – விளையாடலை
விடலை அவன் விட்டு விடலை

கடலை போடுவான் ஒரு கடலை போட்டபடி மனக்
கடலைத் தேடுவான் பாற் கடலை

படலை ஏதும் அகப் படலை – இன்னும் புறப் 
படலை உள்ளம் சுகப் படலை

சுடலை துன்பம் அது சுடலை – தோல்வி அது
சுடலை வாழ்வில் இலை சுடலை

திடலை ஓய்ந்து விழுந் திடலை – எங்கும் ஒளிந்
திடலை ஆட்டம் முடிந் திடலை

சகலை நாளும் இனி ரகளை – ஊதி விடு 
துகளை உதிக்க விடு பகலை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “விடலைப் பாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *