அறிவின் அட்டகாசம்

 

விப்ரநாராயணன்

 

கவிதை பிறந்தது அவளாலே

காதல் பிறந்ததும் அவளாலே

கானகம் சென்றதும் அவளாலே

கதைகள் தோன்றியதும் அவளாலே

நான் மனிதனானதும் அவளாலே

நான் மதமாறியதும் அவளாலே

மாற்றங்கள் பெற்றதும் அவளாலே

ஏமாற்றங்கள்  அடைந்ததும் அவளாலே

செல்வம் கிடைத்தது அவளாலே

செல்வம் சென்றதும் அவளாலே

தொழில் கிடைத்ததும் அவளாலே

தொழில் போனதும் அவளாலே

உருப்படியானதும்  அவளாலே

உருப்படியில்லாமல் ஆனதும் அவளாலே

பதவி உயர்வு கிடைத்ததும் அவளாலே

பதவி பறிபோனதும் அவளாலே

அவள்தான் என் அறிவு

அவளும் அழிந்தாள் அவள் அறிவாலே

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *