சித்ரப்ரியங்கா ராஜா

chit

 

இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்து
குலம் தான் தழைக்கவே
இல்லத்தின் தெய்வமாகி
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ் சிறு அரும்புகளாய்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்து வந்து
ஆற்றலால் சிறந்து நின்று
மெச்சி ஊரார் தானும் புகழ
பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலைகள் அவர் முன்னே!

– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.
14.11.16

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *