பா.ராஜசேகர்

குச்சிஐஸ் ஜிகர்தண்டா
வளையல்கடை
பொம்மைக்கடை முளைக்கும்
கரகாட்டம் ஒயிலாட்டம்
மேளதாளம் முழங்கி 
திருவிழாவும் தொடங்கும்
கன்னியரும் காளையரும் கூட
வீச்சருவா ஐய்யனாரு எதிரே
காதல்கணை பறக்கும்
சின்னஞ்சிறு மனங்களில்
மின்மினிகள் ஜொலிக்கும்
அச்சமட நாணமெல்லாம்
கவிதைகளாய் பறந்து
அழகாய் தெரிந்தது
திருவிழா மட்டுமல்ல
கண்களாலெழுதிய
அழகியகாதலும்தான்
முன்பொருகாலம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *