பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16237423_1214726405248223_530799446_n

32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "படக்கவிதைப் போட்டி – (96)"

  1. பெரியோரே…

    வெள்ளை யுள்ளப் பிள்ளைக்கு
    வேண்டா மிந்த விளையாட்டு,
    பள்ளம் மேடு தெரியாத
    பருவ மிதிலே பிள்ளைக்குக்
    கள்ளம் கபடம் தெரியாமல்
    கவன மாக வளர்த்தேதான்
    உள்ளம் உயர வைப்பீரே
    உறவா யுள்ள பெரியோரே…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. நீரின்றி அமையாது அகிலம்!
    நீயின்றி சுவைக்காது குடும்பம்!
    கண்ணில் நீர் வந்து அன்பைப்
    புரிய வைக்கும் !
    மகனாய் நீ வந்து வாழ்க்கையை
    புரிய வைத்தாய்!
    மழையாய் மண்ணில் வந்து
    நீர் பயிரை வாழ வைக்கும்!
    பெண்ணில் கருவாய் உருவாகி
    அன்னைக்கு பெருமை தந்தாய்!
    சாதி மத பேதம் தெரியாது
    நீருக்கும், தேனாய் தித்திக்கும் பிள்ளைக்கும்!
    நீரிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது
    எத்தனை! எத்தனை!
    கவனமாய் கேளடா நான்
    சொல்லும் கருத்தினை !
    நதியாய் வந்து சொல்லும்
    பாடம் அமைதி!
    அருவியாய் விழுந்து சொல்லும்
    பாடம் ஆற்றல்!
    வெள்ளமாய் ஓடிச் சொல்லும்
    பாடம் வேகம்!
    கடலில் சங்கமித்துச் சொல்லும்
    பாடம் நட்பு!
    அலையாய் எழுந்து சொல்லும்
    பாடம் முயற்சி!
    மழையாய் பொழிந்து சொல்லும்
    பாடம் கொடை!
    நீரைத் தெரிந்து கொண்டால்
    நீதி புரிந்து விடும்!
    தெளிந்த நீரோடை உன்
    மனது தம்பி!
    அழுக்கை தான் ஏற்று
    தூய்மை நமக்கு தரும்
    தண்ணீரைப் போற்றடா தம்பி!

  3. குழப்பமான படமென்றாலும் குட்டிபாப்பாவொன்று
    குதூகலமாய் ஆடுவது தெரிகிறது தண்ணீரில்
    ================
    படக்கவிதை-96
    ================

    குளிப்பதில் சுகம்
    ================

    எண்ணெய்குளியல் உடலுக்கு எழுச்சிதரும்..
    எண்ணக்குளியல் மனதுக்கு மகிழ்ச்சிதரும்..

    உடல்சுத்தம்பெற உடல்குளியல் வேண்டுமெனில்..
    உள்ளம்சுகம்பெற மனக்குளியல் தேவையன்றோ!

    தமிழதனைக் கடலாறருவி மலைமடுவென கவிரெலாம்வருணிப்பர்..
    தமிழ்அமுதமெனும் குளம்தனில் மூழ்கிநானும் கவிபாடவிரும்புகிறேன்!

    கலைந்த தண்ணீரில் எண்ணங்கள் அலையாய்த் தோன்ற..
    தெரித்த திவலைகள் எழுத்துக்களாய் ஏடுகளில்விழ..

    குதித்து மூழ்கி முத்தெடுப்பவர்க்கிடையில்..
    குளித்து மகிழ்ந்த அனுபவத்தைப் பாடுகிறேன்!

    மழைமுகிலில் பிறந்து, ஆர்ப்பரித்து அடிபட்டு..
    மண்மடியில் மெளனமாக தவழும் தண்ணீரோ..

    இளைப்பாற வந்ததுஓர் இடத்தினில் நிலையாகயதில்..
    குளித்துமகிழ மண்ணுயிர்களுக்கு மட்டான மகிழ்ச்சிதரும்!

    மலைமுகட்டில் பொழிந்த மழைத்துளிகள்..
    மரணிக்காமல் தரணிக்கு வந்து கழனியில்தேங்க..

    தவளைஓசையிட தண்ணீரில்நாம் கூத்தாடுவது..
    குவளையில் குளிப்பதைவிட நிலையான ஆனந்தமே!

    பள்ளம் பாய்ந்தோடும் பாறைநீரில்..
    குடைந்து நீராடும் குட்டிப்பையன்..

    குழாய்நீரில் குளித்தே பழகியவனானதால்..
    குளத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பானோ!..

    குளிர்மிகு தண்ணீரில் ஆடும் குழந்தைபெறும்..
    களிப்பாலென் னானந்தக்கண்ணீரும் தண்ணீரோடு மறையுது!

    தொட்டித் தண்ணீலே குளித்திருக்கோமானால்..
    ஒட்டி உடல்நனையக் ஒருநாளும் குளித்ததில்லை!

    ஆழிநீர் அருவிநீரில் குளித்தாலும் அலப்பரியாமல்..
    ஆழமாய் கால்பதித்துக் குளிப்பதில்தான் சுகம்!

    வெட்டவெளிநீரி லொன்றில் தேகமமமிந்தவுடன்..நம்
    வேதனைதான் பறந்திடுமே பனிபோல!

    மெல்லமெல்ல கண்களைமூடி மூழ்கும்போது..
    இருள்விழியினுள்ளேயொரு புரியாத ஒளிதெரிகிறது!

    குழந்தையுள்ளம் வேண்டுமப்பா எதையுமன் போடுரசிக்க..
    குதூகலமாய் குளிப்பதற்க்கே யந்தகுணமிக அவசியம்!

    மழலையின் விளையாட்டு எதுவானாலுமதில்..
    பெறுமின்பம் பெற்றவர்களுக்கொரு பேரின்பம்!

    மூழ்கிமுத்தெடுக்கும் முத்தான என்ரத்தினமே..
    பெருகிவந்தநீரினிலே நீ..நீந்திவரும்போது பித்தாகிப்போனேனே!

    ஓடிநீராட உடன்வாருங்களென் னருமைச்செல்வங்களே!
    ஆடியளைந்தாட ஆடையில்லாமேனியெல்லாம் குளிர்பரவ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.