புற்று நோய் சிகிச்சை
பவள சங்கரி
புற்று நோய் மருத்துவத்திற்காக கடந்த 5 ஆண்டுகளில் 50 வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து மேலை நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 7 வகையான மருந்துகள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் நம் நாட்டிலும் உடனடியாகக் கிடைக்கும்படி தமிழ்நாட்டிலுள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனையும், மும்பை டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய சிகிச்சை முறைகள் (தெரபி) உலகின் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டியதும் அவசியம்.