எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

unnamed (1)

தொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே
இன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்
உன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்
உனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் !

யாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்
வாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே
தாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை
நாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் !

பரிசுபல பெற்றாலும் பகட்டின்றி வாழ்ந்துநின்றாய்
உரியவரை இனங்கண்டு உன்வழியில் இணைத்துநின்றாய்
வறுமையிலும் செம்மையாய் வாழ்வதற்குக் கற்றுக்கொண்டாய்
பொறுமையுடன் நீயிருந்து பொலிந்துவிட்டாய் படைப்புலகில் !

நல்லதமிழ் ஏடுதந்த நாயகனே நீவாழ்க
நல்லதமிழ் எடுத்தாண்ட வல்லவனே நீவாழ்க
மல்லிகையாய் மணங்கொடுத்த மன்னவனே நீவாழ்க
மல்லிகையின் ஜீவாவே வாழ்ந்திடுக பல்லாண்டு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *