( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

 

 

அறிவுநிறை தமிழ் கொழுந்தே

ஆண்டாண்டு வாழியவே

நிறைவுடைய வாழ்வு பெற்று

நீண்டநாள் வாழியவே !

 

கனிவுநிறை உள்ளம் கொண்டு

காலமெல்லாம் வாழியவே

கற்கண்டே கனி அமுதே

களிப்புடனே வாழியவே !

 

இனிமைநிறை வாழ்வு பெற்று

ஏற்றமுடன் வாழியவே

பருவமெலாம் வளம் பெற்று

பாங்குடனே வாழியவே !

 

முத்தமிழே முழு நிலவே

சொத்தேநீ வாழியவே

அர்த்தமுள்ள வாழ்வு வாழ

அகமார வாழ்த்துகிறோம் !

 

வசந்தம்நிறை வாழ்வு பெற்று

வையகத்தில் வாழியவே

வாழ்வெல்லாம் மகிழ்வு கொண்டு

வாழ்ந்திடுக பல்லாண்டு !

 

பிறந்தநாள் கொண்டாடும் வேளை இப்படி வாழ்த்தினால் இனிக்குமல்லவா

வாழ்த்திப் பாருங்கள்

வண்ணமாயிருக்கும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *