அவலம் ஓயனும்!
கவிஞர் இடக்கரத்தான்
இழிவுகளும் நாட்டினிலும் பெருகுது
பெரும் இடரதனால் நாட்டின்வளம் கருகுது
மிக அழிவதனை அன்னைநாடு அணைப்பதற்கு
முன்னதனைக் காக்கனும் – துயர் – போக்கனும்!
அண்ணல்காந்தி தந்தவுயர் விடுதலை
தனை அடகுவைத்து வளர்க்கின்றார் கெடுதலை
பெரும் தன்னலத்தார் அரசியலால் தாய்நாடு தள்ளாடி வீழுது
துயர் – சு+ழுது!
காந்தியவர் வாரிசெனச் சொல்லுறார்
அதில் கருணையதும் இன்றியுமே கொல்லுறார்
மிக வாந்தியுமே எடுத்தாற்போல் வகையற்ற துயராட்சி நடத்துறார்
காலம் – கடத்துறார்!
அவசரக் கோலமெனும் திட்டம் – தந்த அலங்கோலத் தால்கண்டோம் நட்டம்
பெரும் நவரச நாயகனாய் நடித்தேய்க்கும் தாடிமிக மோசம்
வெற்று – கோஷம்!
ஊர்ஊராய் சுற்றியுமே திரிவார்
மிக உத்தமராய் காட்டியுமே வருவார்
உற்றுப் பாரெந்தன் நடிப்பதனை பாரனைத்தும்
போற்றுதெனை என்கிறார் – நாட்டைத் – தின்கிறார்!
தாமரையை வளர்க்கவுமே எண்ணுறார்
ஆட்சித் தளவாடத் தால்துயரும் பண்ணுறார்
பெரும் பு+மறையும் நாகமெனப் பெருந்தீங்கை
மறைந்தவரும் செய்யுறார் வாகை – கொய்யுறார்!
தூஙகும்வரை தொடையில்கயிறு திரிப்பார்
நம் தயவாலும் ஜெயித்துமிகச் சிரிப்பார்
துயர் தாங்குதற்கா நாம்பிறந்தோம்?
துணிந்தெழுந்து நாம்புயலாய் பாயனும் – அவலம் – ஓயனும்!
08.08.2017