மீ.விசுவநாதன்

        lord-shiva-god-pictures-sivan-155910 (1)                                                                                                  

 பற்றறுந்து பற்றறுந்து பற்றறுந்து போக

    பாவிநானும் எத்தனைநாள் இங்கிருந்து வாழ !

கற்றவித்தை அத்தனையும் கள்ளமென்று கண்டு

    கண்மூடி உள்தேடக் காலமின்னு மில்லை !

உற்றதுணை அத்தனையும் ஓட்டையான கப்பல்

    ஊர்சுற்றச் சென்றுவிட்டேன் உல்லாசத் தெப்பம்!

முற்றுணர்ந்த ஞானியில்லை முழுமூட(ன்) என்னுள்

    மூச்சுமுட்ட நிற்குதடா ஆதிசக்தி வெள்ளம் !

 

சுள்ளென்ற வெய்யிலிலும் சொட்டுகிற வேர்வை

    சுந்தரனாம் பேரொளியை நீராட்டும் சேவை !

உள்ளொன்றும் வெளியென்றும் ஒன்றுமெனக் கில்லை

    ஓங்காரப் பொருள்தேடும் ஓயாத வேலை !

நள்ளிரவில் சூரியன்போல் நானுன்னைக் கண்டு

     நாளெல்லாம் பைத்தியமாய் சுற்றுகிறேன் ஈசா !

வெள்ளிநிலாக் கொண்டவனே வெண்பனியாம் என்னுள்

     வெளிச்சமெனும் சக்தியுடன் வீற்றிருப்பாய் என்றும் !

             (இன்று  19.08.2017 பிரதோஷம்) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.