கேசவ் வண்ணம் – கிரேசி எண்
முகமில் திருமால், முகமில் துருவன்,
அகம்புறம் இணைதார்தன் ஆன்ம -நகமாம்வெண்
சங்கினால் கன்னத்தில் சித்திரம் இட்டளித்தார்
மங்காத விண்மீன் மலர்’’….!
உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….
”பக்த துருவனை பக்கம் அழைத்தவர்க்கு
உட்கார் மடிதானே உன்தேவை -தேவுவவர்(தேவு அவர்)
புள்ளா சனமமர்ந்து புள்ளைக்(கு) அளித்தார்,வான்,
உல்லாஸ மீனாய்(துருவ நக்ஷத்திரம்) உலவு”….!
பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!