அக்கரையும் இக்கரையும்
திருமதி ராதா விஸ்வநாதன்
இலக்கை காட்டி
வளர்த்தேன் உன்னை
தனிமரமாக நின்று
இலட்சியத்தோடு
வளர்ந்தாய் நீயும்
ஈன்ற பொழுதினும்
பெரிதுவந்தேன்
இறுதி வரை
இருப்பாய் என்னுடன்
என்றே இருந்தேன்
இறுமாப்புடன்
அக்கரையில் தான்
உன் எதிர்காலமென
உதறிச் சென்றாய்
உறவுகள் அத்தனையும்
எண்ணிக் கழிக்கிறேன்
என் எதிர்காலத்தை
ஒவ்வொரு இரவின்
இருட்டின் துணையோடு