திருமதி இராதா விஸ்வநாதன்

 

விலக எண்ணிவிட்டாய்

விரல் விட்டு எண்ண

ஆயிரம் காரணங்கள் 

இருக்கலாம்

சொல்வதற்கு…

 

எனக்கும் உனக்கும்

என்ன உறவு

இது தானே உனது கேள்வி

 

உதட்டிலிருந்து 

வந்த உறவல்ல இது

உள்ளத்தின் ஊற்றாய்

வந்த உறவு

 

உவமை வேண்டுமா

உரைக்கிறேன் கேள்

கண்கள் இரண்டாயினும்

காணுவதில்லை

ஒன்றை ஒன்று

 

ஆனால் 

ஒன்றில் இடர் வர

கண்ணீர் சிந்தும்

மற்றொரு கண்

அதே உறவு தான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.