பெண்களின் எதிர்காலம்

திருமதி ராதா விஸ்வநாதன்

 

 

போற்றுவதற்குரிய

பெண்மை இன்று

சூரையாடப்படுகிறது

 

பச்சிளம் சிறுமிகள்

சிதைக்கப்பட்டு

புதைக்கப்படுகிறார்கள்

சில காமுகரால்

 

துள்ளித் திரியும் வயதில்

கிள்ளி கசக்கி

எறிவது ஏற்றதா

 

 

தாயைக் காப்பான்

தாய் மண்ணைக் காப்பான்

பெண்ணைக் காப்பான்

என தன் ஆண் மகவுக்கு

மார் சொரிந்த

தாயின் மார்பகத்தில்

கொட்டுகிறது குருதி

 

காக்கும் கரங்கள் இன்று

காமத்திற்கெனவே

எழுவதைக்காண

ஈன்ற பொழுதை எண்ணி

வெட்கி தலை குனிகிறது

தாய்குலம்

 

இதனால் தானோ

பசுமை பூமிக்கு

சுமையாகி விட்டது

 

மண்மகள் தன்னையே

புதைத்துக் கொண்டாள்

தன் முகத்தை

 

அடர்ந்த அழகு வனம்

ஆச்சுது இங்கு

பாலை வனம்

 

தாய் குலத்தின்

மானம் சூரை போவதால்

வானம் கூட மறந்து விட்டது

மழையை

 

கருணை பாசம் நேசம்

மறந்த நெஞ்சம் போல்

மறந்து விட்டது

நதிகளும் தன் கதியை

 

எதிர்பார்க்கலாமா

ஏமாறாமல்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *