ஒழுகும் துளையை அடைக்கிறேன்
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++
மழைத்துளி ஒழுகும் வீட்டுத்
துளை அடைக்க முனைகிறேன் !
மழைநீர் எங்கு போய்ச்
சேரு தென்று
கவலை யுறும் என்மனம் !
கதவு நெடுவே காணும்
பிளவு அடைக்க முனைகிறேன் !
அது எங்கு போய்
முடியு மென்று
கவலை யுறும் என்மனம் !
எனக்கு கவலை இல்லை ,
என் எண்ணம் தவறாயினும் !
நினைத்தது சரியே
என்னும்
இனத்தினைச் சேர்ந்தவன் !
என் எண்ணம் சரிதான் !
அங்கு நிற்கும் மாந்தரைப் பார் !
அவர் ஒத்துக் கொள்ளார் !
வெற்றியும் அடையார் !
எனது வீட்டு வாசல் வழி
ஏன் நுழையார்
என்று வியப்புறும் என்மனம் !
இல்லத்து அறைகளைப்
பல்வேறு
வண்ணத்தில் மாற்றுகிறேன் !
எங்கு என்மனம் நேராய்ப் போகுதோ
அங்கு நோக்கிச் செல்கிறேன் !
இங்கும் அங்கும் திரியும் அற்ப
மக்கள் பற்றித்
துக்கப் படுகிறேன் !
வரவேற் பில்லை அவருக்
கென் வீட்டு
வாசல் வழியே நுழைந்திட !
நேரம் எடுத்துக் கொள்கிறேன்,
வேண்டாத பல்வேறு
காரியங் களுக்கு .
ஆயினும் அவற்றைத்
தேர்வு செய்யப் போகிறேன்.
மழைத்துளி ஒழுகும் வீட்டுத்
துளை அடைக்க முனைகிறேன் !
மழைநீர் எங்கு போய்ச்
சேரு தென்று
கவலை யுறும் என்மனம் !