மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மழைத்துளி ஒழுகும் வீட்டுத்

துளை  அடைக்க முனைகிறேன் !

மழைநீர் எங்கு போய்ச்

சேரு தென்று

கவலை யுறும் என்மனம் !

கதவு நெடுவே காணும்

பிளவு அடைக்க முனைகிறேன் !

அது எங்கு போய் 

முடியு மென்று

கவலை யுறும் என்மனம் !

எனக்கு கவலை இல்லை ,

என் எண்ணம் தவறாயினும் !

நினைத்தது சரியே

என்னும்

இனத்தினைச் சேர்ந்தவன்  !

என் எண்ணம் சரிதான் !

 

அங்கு நிற்கும் மாந்தரைப் பார் !

அவர் ஒத்துக் கொள்ளார் !

வெற்றியும் அடையார் !

எனது வீட்டு வாசல் வழி

ஏன் நுழையார்

என்று வியப்புறும் என்மனம் !

இல்லத்து அறைகளைப்

பல்வேறு

வண்ணத்தில்  மாற்றுகிறேன் !

எங்கு என்மனம் நேராய்ப் போகுதோ

அங்கு நோக்கிச் செல்கிறேன் !

 

இங்கும் அங்கும் திரியும் அற்ப

மக்கள் பற்றித்

துக்கப் படுகிறேன் !

வரவேற் பில்லை அவருக்

கென் வீட்டு

வாசல் வழியே நுழைந்திட !

நேரம் எடுத்துக் கொள்கிறேன்,

வேண்டாத பல்வேறு

காரியங் களுக்கு .

ஆயினும்  அவற்றைத்

தேர்வு செய்யப் போகிறேன்.

 

மழைத்துளி ஒழுகும் வீட்டுத்

துளை  அடைக்க முனைகிறேன் !

மழைநீர் எங்கு போய்ச்

சேரு தென்று

கவலை யுறும் என்மனம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.