எல்லைச்சாமி
ராதா விஸ்வநாதன்
கிழக்கு வெளுத்திடுச்சு
சேவலும் கூவுது
தூக்கத்தில துக்கத்தை
தொரத்த நினைச்சேன்
தோத்துதான் போயிட்டேன்
பாயும் தேஞ்சு போச்சு
படுத்தா தூக்கம் வருதா என்ன
துக்கம்தான் வருது மச்சான்
இந்த துக்கத்திலேயும் சுகம் இருக்குது
நாட்டை காக்க என் மச்சான்
நாலு வருசமா நிக்கிறே
எல்லையிலே நீ அங்கனே இருக்க
எல்லைச்சாமி காவல் இருக்கு இங்கனே
என் நினைப்பு வரக்கூடாது மச்சான்
நாட்டு மண்ணை காக்கணும் மச்சான்
ஏமாந்து போக வேணாம் மச்சான்
எதிரியே கொன்னு போடு இல்லே
மார்லே குண்டு பட்டு வா
என் மாராப்பு சேலை வீராப்பை காட்ட
எதிர் பார்த்து நிப்பேன் நிலப்படியிலே