திருக்கடவூரில் கால சம்ஹார விழா

மரபின் மைந்தன் முத்தையா
திருக்கடவூரில் இன்று கால சம்ஹார விழா – கால சம்ஹார மூர்த்திக்கு அபிடேக ஆராதனை
சூலமேந்தி வீறு கொண்டான் சூரசம்ஹாரன்
சூட்சுமமாய் அருள வந்தான் ஏழைப் பங்காளன்
கால காலன் கருணை கொண்டான் காத்து ரட்சிக்க
கழல்களிலே மலர்கள் தூவி நாமும் அர்ச்சிக்க
மார்க்கண்டேயன் அழுத போது முன்னே வந்தவன்
மார்க்கமுண்டு எனும் உறுதி நமக்குத் தந்தவன்
காக்க வேண்டும் காக்க வேண்டும் காலகாலனே
காலமறிந்து சூலம் வீசு எங்கள் ஈசனே