படக்கவிதைப் போட்டி – 272

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (23.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
தியாக தீபம்…
மானாவாரிப் பயிராய்த்
தானாய் வளரும்
தாயில்லாப் பிள்ளைகள்..
பெற்றவர்கள் இல்லாதபோது
மற்றவர்கள் போற்ற
உடன்பிறப்பு உறுதுணையாகிறது,
அன்னையாய் தந்தையாய்
ஆகிறாள் அக்காவே..
உடன்பிறப்புகளின்
உதட்டுச் சிரிப்பு நிலைக்க
அவள்
உருகும் மெழுகுவர்த்தியாய்
உதவி,
தன்சுகம் மறந்த
தியாக தீபமாய் ஒளிர்கிறாள்…!
செண்பக ஜெகதீசன்…
சிரிப்பு தொடரட்டும்!
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பு!
கடவுள் வாழும்
உள்ளங்களின் சிரிப்பு!
வித்தைக் காட்டுபவர் செய்த
வேடிக்கையால்
விளைந்த சிரிப்போ!
விலங்கினக் குரங்கின்
சேட்டைகளால்
எழுந்த சிரிப்போ!
வளர வளர
வாழ்க்கைப் பயணத்தில்
வருகின்ற சோதனைகளின்
வலிகளால்
வாய் விட்டு சிரிக்காமல்
நோய்த் தொற்றுக்கு ஆளாகி
நொறுங்கி விடாதீர்கள்!
காலங்கள் பல கடந்தாலும்
தொடரவேண்டும்
இந்தக் களிப்பு!
கோ சிவகுமார்
மண்ணிவாக்கம்
சென்னை
ஐந்தாவது
எட்டாவது
வகுப்பு
மாணவர்கள்
கண்டிப்பாக
அரசு பொதுத்தேர்வு
அறிவித்தீர்கள்
பிஞ்சு மனதில்
அச்சமோ அச்சம்
நடந்தது என்ன
ஒன்று முதல்
பதினொன்று
வரையில்
தேர்வே இல்லை
ஒன்பது வரையில்
ஆல்பாஸ்
குழந்தையும் தெய்வமும்
ஒண்ணுன்னு
உணர்த்தி விட்டது
காலக் கடிகாரம்
மாற்றம் வேண்டும்
ஆணிவேரில்
கிளைகளில் அல்ல
அறிவை சொல்லி
கொடுப்பதில்
மாற்றங்கள்
கொண்டு வந்து
வெற்றி காணுங்கள்
அதை விட்டு விட்டு
அறிவை சோதிக்க
தேர்வு என்பது
தீர்வு ஆகுமோ
மழலை பள்ளி
மகத்தான
மாற்றங்கள்
கண்டால்
மற்ற பள்ளியில்
புரிதல் எளிது
ஜப்பானிய
கல்விமுறை
மழலை பள்ளிக்கே
முன்னுரிமை
தேசப் பற்று
ஒழுக்கம்
தற்காப்பு கலை
வாழ்வியல் பாடமாக
அதை விட்டு விட்டு
தேர்வில் மட்டுமே
மாற்றங்கள் என்பது
தடுமாற்றங்கள்
சீ.காந்திமதிநாதன்
கோவில்பட்டி
கொலை வெறி
அண்ணாவின் தலையை வெட்டி அக்காவின் காதறுத்து
என்ன மட்டும் உருப்படியா விட்டிருக்காரு – அவரு
எங்க ஊரு தலைசிறந்த போட்டோக் கிராபரு
சிரிச்சுக்கிட்டு நிக்கச்சொல்லி சிதறாமப் பதறாம
மறிச்சு வச்சி எங்களையவர் படமெடுத்தாரு – அண்ணன்
மண்டையைில்தான் பாதியில்லை பேத்துப்பிட்டாரு
தலைவெட்டி நித்தியண்ணன் தரமான காமிராமென்
கொலைவெறியில் நின்னுக்கிட்டு படமெடுத்தாரு – எங்களை
கொல்லாமல் விட்டுவிட்டார் கடவுள் காத்தாரு.
காதைவெட்டி அக்காவின் கதை முடிக்கப் பாத்தாரு
வேதனையைத் தாங்கிக்கிட்டு சிரிச்சு நின்னாளு – அவளு
வீரமுள்ள பொண்ணு நெல்ல விவரமான ஆளு
கொத்துனாலும் கொதறினாலும் நித்தியண்ணன் கொலைவெறிய
எத்தனைதான் தரமின்னாலும் நாங்க தாங்குவோம் – அவரு
எடுக்கப் போகும் படத்துக்கெல்லாம் போஸு குடுப்போம்.
இரக்கமுள்ள மனிதரவர் என்னை மட்டும் வுட்டுப்பிட்டார்
சிரத்தை வெட்டி அரியாமத் தப்ப விட்டாரு – அவரு
சிந்தையில கனிவிருக்கு உயிரைத் தந்தாரு.
காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.
அரகரோகரா சாமி அரகரோகரா
அரகரோகரா சாமி அரகரோகரா
சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ்கிறோம்
நிகழ்காலமே முக்காலமென
இறந்த கால நினைப்பேது
எதிர்கால சிந்தனையேது
சிரித்து சிரித்து வாழ்கிறோம்
அரை வயிறு கஞ்சி
அழுக்கடைந்த ஆடை
வறுமை இல்லை
மனதின் எண்ணத்திற்கு
சிரித்தே வாழ்கிறோம்
சிரித்தே வாழ்கிறோம்
நிகழ்காலமே
முக்காலமென
எக்காள ஏளனம் இல்லை
எவர் மீதும் பொறாமை
எண்ணம் எள்ளளவும் இல்லை
சிரித்தே வாழ்கிறோம்
சிரித்தே வாழ்கிறோம்
நிகழ்காலமே முக்காலமென
அன்பு தானே வலிமை
புகட்டியது எளிமை
பெரியோரை மதிக்கிறோம்
பெரியோரை துதிக்கிறோம்
சிரிக்கும் சிரிப்பு
தருமாமே ஆரோக்கியம்
ஆரோக்கியம் தானே
வாழ்வின் பாக்கியமே
மனிதருக்கு
இறைவன் தந்த வரம்
சிரிப்பு தானே
சிரிக்க மறந்தால்
சிரிப்பை துறந்தால்
பூரிப்போ பரிதவிப்பிலே
சிரிப்போம்
சிரிப்போம்
சிரித்துக்கொண்டே
மற்றவர்களையும்
சிரிக்க வைப்போம்
சீ.காந்திமதிநாதன்
கோவில்பட்டி
படக்கவிதைப் போட்டி எண் 272
கண்களை சுருக்கி
வெண்பற்களைக் காட்டும்
உங்கள் புன்னகை
அதில் எத்தனை வெகுளித்தனம் !!
முத்துப் பற்களாய் முல்லைப் பூக்களாய்
கடற்கரைச் சோழிகளாய்
காந்தக் கதிர்களாய்
இதில் கள்ளமில்லை கபடமில்லை
இப்படியே நகைத்திரு
சுற்றமும் நட்பும் என்றும் சூழ
சிரித்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
சுதா மாதவன்
பிள்ளைப்பருவம்
பட்டிதொட்டி அனைத்திலுமே
பகைமை கொண்ட அனைவரையும்
முட்டிமோதி வெற்றி கொண்டு
ப்ட்டம் சூடும் சூழ்ச்சியில்லை…
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
ஒட்டி கட்டி முடித்து வைத்து
கவலைக் கடலில் தத்தளித்துத்
துன்பம் கொள்ளும் நிலைமையில்லை
தோல்விக்கு அஞ்சும் வீரமில்லை
வெற்றிக்கு வாடும் வாட்டமில்லை
அச்சம் நாணம் இச்சை இல்லை
எதம் இல்லையென்ற வாட்டமில்லை
சென்றதை எண்ணி வருத்தமில்லை
வருவதை நாடி ஏக்கமில்லை
இன்றைய பொழுதின் இன்பமதை
இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை
கள்ளம் கபடம் சூதுமின்றி
வெள்ளை உள்ளம் கொண்டு
பிள்ளைகள் வாழும் வாழ்க்கையைப்போல்
இன்பம் ஏதும் உலகிலில்லை