இன்னம்பூரான்

எங்கே போகிறோம்? உலகெங்கும் இதழ்கள் இந்தியாவை கேலி செய்கின்றன. சர்வதேச சந்தையில் உரைகல் தேய்க்கும் Standard & Poor போன்றோர் இந்தியாவை நிதி நிலை மதிப்பீட்டில் ‘அம்போ’ என்று இறக்கிவிடுகிறார்கள். இந்திய ரூபாய் அதலபாதாளம். புள்ளி விவரங்கள் எல்லாம் தகாலடி என்று பெரிசுகள் பேசுகின்றன. ரிசர்வ் வங்கி பரமபத சோபான மயக்கத்தில். ஆடிட்டர் ஜெனெரலோ 2ஜி, ரிலையன்ஸ் எரிவாயு, நிலக்கரியையே காசை கரியாக்குவது என்றெல்லாம் கிடுக்கிப்பிடி போட்றார். உச்ச நீதி மன்றத்தில் சொச்சம், மிச்சம் இல்லாமல் எல்லாரும் Sorry-go-round அடிக்கிறார்கள்.

இன்று வந்த செய்தி: ஆனானப்பட்ட துணிமணி இலாக்காவும், கனரக தொழில் இலாக்காவும், தங்களுடைய வருடாந்திர மானியத்தில், 63% & 60% செலவை மார்ச் 31 அன்று செய்திருக்கிறார்கள். 364 நாட்கள் என்ன செய்து வந்தார்கள் என்பது கேள்விக்குறி. ஆனால், ஒன்று திண்ணம். கொடுக்கல், வாங்கல், விளம்பரம், சின்ன/பெரிய கட்டுமானங்கள், வீண் செலவு, அள்ளி தெளிப்பது எல்லாவற்றுக்கும் இந்த வருடக்கடைசி ஊதாரித்தனம் தான் ஊற்றுக்கண்.

அன்று (1956) வந்த செய்தி: கொடுக்கல், வாங்கல், விளம்பரம், சின்ன/பெரிய கட்டுமானங்கள், வீண் செலவு, அள்ளி தெளிப்பது எல்லாவற்றுக்கும் இந்த வருடக்கடைசி ஊதாரித்தனம் தான் ஊற்றுக்கண்.

அன்று ஆடிட்டர் ஜெனெரல் சொன்னது: சுக்கு, மிளகு, திப்பிலி. அன்றிலிருந்து, இன்று வரை அரசு காதில் விழுந்தது: ‘சுக்குமி, ளகுதி, ப்பிலி…’!

ஃபோட்டோ நன்றி: ஆழ்கடல் களஞ்சியம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.